கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நேரத்தை செலவிடுவது குறைந்து போய் விட்டது.
அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, "உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள்.