இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது. பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை.
ஆச்சரியப்பட்ட மனைவி, "நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?" என்றாள்.
கணவர், "கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன்" என்று பதிலளித்தார்.
அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது...
"இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய்.